டெல்லி சென்றுள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பிரதமர் மோடியை சந்தித்து வயநாட்டில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் ரூ.2,000 கோடி நிதி ஒதுக்குமாறும், முதற்கட்டமாக ரூ.900 கோடியை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மோடி பிரதமராக 3வது முறையாக பதவியேற்ற பிறகு டெல்லியில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்தது முதல் முறையாகும்.
The post டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்திப்பு..!! appeared first on Dinakaran.