துணை தாசில்தார் சுந்தர் முன்னிலை வகித்தார். முதன்மை அலுலவர் சுப்பிரமணி வரவேற்றார். இக்கூட்டத்தில், மீஞ்சூர்-பொன்னேரி நெடுஞ்சாலை மற்றும் காட்டூர், பழவேற்காடு செல்லும் கிராமப்புற சாலைகளில் எந்நேரமும் கால்நடைகள் சுற்றி திரிவதால், அவ்வழியே சென்று வரும் வாகனங்களின் விபத்துகளை தடுக்க, அந்தந்த பகுதிகளில் உள்ள கால்நடை உரிமையாளர்களிடம் சாலைகளில் கால்நடைகளை அவிழ்த்து விடக்கூடாது. அதை பாதுகாப்பாக கட்டி பராமரிக்க வேண்டும் என முதலில் பொது விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதை மீறி நடக்கும் உரிமையாளர்களின் கால்நடைகளைப் பறிமுதல் செய்து, மெதூர் மற்றும் திருவள்ளவாயல் பகுதியில் உள்ள பவுண்டில் கால்நடைகளை அடைத்து வைத்து, நாளொன்றுக்கு ₹500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி நடக்கும் மீறும் கால்நடை உரிமையாளர்கள்மீது காவல் நிலையத்தின் மூலம் வழக்குப்பதிவு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
The post பொன்னேரி தாசில்தார் தலைமையில் சாலையில் கால்நடைகள் திரிவதை தடுக்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.