வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து விழுந்த வாலிபர் வாக்களித்து ஜனநாயக கடமை

சிங்கம்புணரி : சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதர்சன்(23). கூலித்தொழிலாளி. இவர் நேற்று சிங்கம்புணரி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி 68ல் வாக்களிப்பதற்காக மாலை 5.30 மணிக்கு வந்தார். அப்போது, வரிசையில் நின்று கொண்டிருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு வாக்குச்சாவடிக்குள்ளேயே கீழே விழுந்தார். இதில் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. அங்கு வந்த 108 வாகன மருத்துவக் குழுவினர் சுதர்சனுக்கு முதலுதவி செய்தனர். அதன்பின், சுதர்சன் வாக்களிப்பதாக கூறியதை தொடர்ந்து அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர். அதனை தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

The post வாக்குச்சாவடிக்குள் வலிப்பு வந்து விழுந்த வாலிபர் வாக்களித்து ஜனநாயக கடமை appeared first on Dinakaran.

Related Stories: