அதே வேளையில் பிரதமர் உருவத்துடன் நிரந்தர செல்ஃபி மையம் அமைக்க ரூ.6.25 லட்சம் மற்றும் தற்காலிக செல்ஃபி மையத்திற்கு ரூ.1.25 லட்சம் செலவழிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய ரயில்வே பதில் அனுப்பியிருந்தது. இந்த தொகை வேறுபாடு சர்ச்சையை ஏற்படுத்தியது. தகவலை துணை பொது மேலாளர் பகிர்ந்த நிலையில், அவரது மேலதிகாரியான மக்கள் தொடர்பு அலுவலர் சிவ்ராஜ் மனஸ்பூர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த பதவி காலம் 2 ஆண்டு என்ற நிலையில் 7 மாதங்களிலேயே அவர் மாற்றப்பட்டது குறித்து உண்மைக்கு அரசர் தண்டனை கொடுத்துள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், மண்டல பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் கடிதத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மண்டல ரயில்வே அலுவலகங்கள் மற்றும் பிற அலகுகள் வழங்கும் பதில்கள் தரமற்றவையாக உள்ளதாக கூறப்படுகிறது. பதில்களை அனுப்ப தாமதமாவதால் வேலைப்பளு அதிகரிப்பதுடன் ரயில்வேக்கு அவப்பெயர் ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தரமான பதில்கள் என்பதை உறுதிப்படுத்தும் நிலையில் இனி மண்டல பொதுமேலாளர், கோட்ட பொதுமேலாளர் ஒப்புதல் பெற்றே அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post பிரதமர் மோடி செல்ஃபி பூத் சர்ச்சை: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதிலளிக்க ரயில்வே கட்டுப்பாடு விதிப்பு!! appeared first on Dinakaran.