கடைசி வரை த்ரிங்காக நடந்த இந்தபோட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் நாளை மாலை அர்ஜென்டினாவுடன் இந்தியா மோதுகிறது.பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 21-8,22-20 என கவுதமாலாவின் கெவின் கோர்டானை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 21-17,21-14 என பிரான்ஸ் ஜோடியை வென்றது. 2வது நாளான இன்று துப்பாக்கிசுடுதல், பேட்மிண்டன், நீச்சல், வில்வித்தை போன்ற விளையாட்டுகளில்இந்திய வீரர்கள் களம் இறங்குகின்றனர். டேபிள்டென்னிஸ் தனிநபர் பிரிவில் மாலை 3 மணிக்கு சரத்கமல், நீச்சலில் தனிநபர் பிரிவில் ஹரி, தினிதி, டேபிள் டென்னிசில் மாலை 4.30 மணிக்கு மணிகா பத்ரா ,பேட்மிண்டனில் இரவு 8 மணிக்கு ஆடவர் ஒற்றையரில் பிரனாய் களம் காண்கின்றனர்.முதல் நாளில் ஆஸ்திரேலியா மகளிர் நீச்சல் போட்டியில் 2, சைக்கிள் ரேசில் மகளிர் பிரிவில் ஒரு தங்கம் என மொத்தம் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கம் வென்றது. சீனா 2 தங்கம், ஒரு வெண்கலம், அமெரிக்கா ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கமும், பிரான்ஸ் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கமும் வென்றன.
The post பாரிஸ் ஒலிம்பிக்: குத்துச்சண்டையில் ரவுன்ட் 16 சுற்றுக்கு பிரீத்தி பவார் தகுதி: முதல் நாளில் 5 பதக்கம் அள்ளிய ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.