இந்நிலையில், பரமக்குடி அருகே பொட்டிதட்டி கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் குவித்து வைத்திருப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து உரப்புளி விஏஓ சதீஷ்குமார் கொடுத்த தகவலின்பேரில், அதிகாரிகள் சூளைக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், சூளை உரிமையாளர் மோகன்தாஸ், அவரது சொந்த நிலத்தில் உரிய அனுமதியின்றி 1,000 யூனிட் சவுடுமண் அள்ளி வந்து பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து விஏஓ கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மோகன்தாஸை தேடி வருகின்றனர்.
The post பரமக்குடி அருகே செங்கல் சூளையில் சவுடுமண் பதுக்கல்: உரிமையாளருக்கு போலீசார் வலை appeared first on Dinakaran.