ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை

சென்னை: தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை பிறப்பித்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வரும் வியாழக்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு அளித்துள்ளார். விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம்? தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும். செல்போனை ஒப்படைக்கும்படி வலியுறுத்தக் கூடாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் கூறியுள்ளார்.

The post ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை appeared first on Dinakaran.

Related Stories: