ஆனால், வி.ஐ.பி-க்கள் தரிசனம் செய்ய வாரும் நேரத்தில் மற்ற பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் வி.ஐ.பி-கள் தரிசனம் செய்வதற்கு மாலை 3 மணி முதல் 4 மணி வரை நேரம் ஒதுக்கவும், அந்த சமயத்தில் மற்ற பக்தர்களில் தரிசனத்தை நிறுத்தி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தை பூசம், பங்குனி உத்திரம், கிருத்திகை உள்ளிட்ட 44 விஷேச நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் வி.ஐ.பி. தரிசனத்தை அமல்படுத்தவும், ஒரு நபருக்கு ரூ.300 கட்டணம் வசூல் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. வி.ஐ.பி. தரிசன நேர ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் ஆட்சேபனை மற்றும் கருத்துக்களை கோயில் நிர்வாகத்திடம் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பழனி முருகன் கோயிலில் வி.ஐ.பி தரிசனத்திற்கு தனி நேரம் ஒதுக்க முடிவு: பக்தர்கள், பொதுமக்கள் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.