மாலை 4 மணியளவில், மூலப்பொருட்களை எடுப்பதற்காக ராஜமாணிக்கம் ஒரு கட்டிடத்திற்குள் சென்றபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில் அந்த கட்டிடம் முழுவதும் தரைமட்டமானது. இதில் ராஜமாணிக்கம் 200 மீட்டர் தாண்டி 3 துண்டுகளாக உடல் சிதறி விழுந்து உயிரிழந்தார்.
சத்யா, விஜயா, அங்கம்மாள், சித்ரா ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர். ராஜமாணிக்கம் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சில் ஏற்றியபோது, உறவினர்கள், ஆம்புலன்சை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர். ஆலை உரிமையாளர் தனசேகர், தொழிற்சாலை அனுமதி பெறுவதற்கு நவம்பர் மாதம் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இதுவரை அவருக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
The post பட்டாசு ஆலையில் வெடி விபத்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.