இதையடுத்து முதல் கணவரை முறையாக விவாகரத்து செய்யாமல் எல்லை தாண்டி சென்று வேறொருவரை மணந்த அஞ்சு மீது ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்ட காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு ஆல்வார் மாவட்ட பூல்பாக் காவல்நிலையத்தில் அரவிந்த் குமார், “தன்னை விவாகரத்து செய்யாமல் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், தொலைபேசிய மூலம் நஸ்ருல்லாவும், அஞ்சுவும் தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் அஞ்சு பாகிஸ்தான் செல்ல போலி ஆவணங்கள், கையெழுத்தை பயன்படுத்தினாரா என்பதை ஒன்றிய அரசு ஆய்வு செய்யவும் அரவிந்த் குமார் வலியுறுத்தியுள்ளார்.
The post பாக். காதலனை கரம் பிடித்த இந்திய பெண் மீது கணவர் புகார் appeared first on Dinakaran.