இதுகுறித்து சுகுணா திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மருத்துவமனை வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரணை நடத்திய போது, பெரம்பூர் வடக்கு மாதவரம் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய யாக்கூப் பாஷா (34) என தெரியவந்தது. இவர், அரசு மருத்துவமனையில் நோயாளிகள் போல் அனைத்து வார்டுகளிலும் சென்று, தனியாக இருக்கும் நோயாளிகளிடம் தொடர் செல்போன் மற்றும் பணம் திருடி வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் யாக்கூப் பாஷாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
The post ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.
