இதில் படகுகளை புதுப்பித்தல், என்ஜினில் பழுது நீக்குதல், புதிய மீன்பிடி வலை கட்டுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். மீண்டும் கடலுக்கு செல்ல தயாராகும் வகையில் மீனவர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் உதவி இயக்குநர் அப்துல் காதர் ஜெய்லானி தலைமையில் இன்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து தயாராக நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை நேரில் ஆய்வு செய்தனர். அப்போது படகுகளின் உறுதித் தன்மை, பதிவெண் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் படகுகளின் ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன.
The post ராமேஸ்வரம் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள விசைப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.