நார்த்ஈஸ்ட்டை வீழ்த்தியது மோகன் பகான்

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நார்த்ஈஸ்ட் யுனைட்டட் எப்சி அணியுடன் மோதிய மோகன் பகான் சூப்பர் ஜயன்ட் 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. விவேகானந்தா யுவபாரதி கிரிரங்கன் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில் நார்த்ஈஸ்ட் வீரர் பெமம்மர் 4வது நிமிடத்திலேயே கோல் போட்டு அந்த அணிக்கு முன்னிலை தந்தார். மோகன் பகான் சார்பில் பிஸ்வாஸ் 10வது நிமிடத்தில் கோல் போட்டு 1-1 என சமநிலை ஏற்படுத்தினார். நார்த்ஈஸ்ட் அணியின் அஜாரெய் 24வது நிமிடத்தில் கோல் அடிக்க, அந்த அணி 2-1 என மீண்டும் முன்னிலை பெற்றது. இடைவேளை வரை இதே நிலை நீடித்தது. 2வது பாதியில் ஆதிக்கம் செலுத்திய மோகன் பகான் அணிக்கு போஸ் (61வது நிமிடம்), கம்மிங்ஸ் (87வது நிமிடம்) கோல் அடிக்க, ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

The post நார்த்ஈஸ்ட்டை வீழ்த்தியது மோகன் பகான் appeared first on Dinakaran.

Related Stories: