ருத்ர படேல் 10 ரன் மட்டுமே எடுத்து ஹோக்ஸ்ட்ரா பந்துவீச்சில் ரனால்டோவிடம் பிடிபட்டார். எனினும், சஹில் பராக் – அபிக்யான் குன்டு ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியில் இறங்க, இந்தியா யு-19 அணி 22 ஓவரிலேயே 1 விக்கெட் இழப்புக்கு 177 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. சஹில் பராக் 109 ரன் (75 பந்து, 14 பவுண்டரி, 5 சிக்சர்), அபிக்யான் குன்டு 53 ரன்னுடன் (50 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டி செப்.26ல் நடக்கிறது. அதைத் தொடர்ந்து இரு அணிகளும் சென்னையில் 2 டெஸ்ட் போட்டிகளில் (4 நாள், அதிகாரப்பூர்வமற்றது) விளையாட உள்ளன.
The post தொடரை வென்றது இந்தியா யு-19 appeared first on Dinakaran.