இந்தியா கூட்டணியில் பீகாரில் நிதிஷ் கட்சி 17 இடங்களில் போட்டி

பாட்னா: இந்தியா கூட்டணியில் பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் கட்சி 17 இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் 40 எம்பி தொகுதிகள் உள்ளன. அங்கு இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து உள்ளது. இதை ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்தார்.

மீதம் உள்ள 23 தொகுதிகளில் லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் பங்கிட்டு போட்டியிட வேண்டும். ராஷ்ட்ரீய ஜனதாதளம் 17 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், சிபிஐ எம்எல் ஒரு இடத்திலும் போட்டியிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். அதே சமயம் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலா 15 தொகுதிகளில் போட்டியிட்டு, காங்கிரசுக்கு 9 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் விருப்பம் தெரிவித்து உள்ளது.

The post இந்தியா கூட்டணியில் பீகாரில் நிதிஷ் கட்சி 17 இடங்களில் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: