கனடாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பாபர் கல்சா அமைப்பை ஒன்றிய அரசு சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு (உபா) சட்டத்தின் கீழ் தடை செய்துள்ளது. இந்நிலையில், இந்த அமைப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை தேடி தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் உள்ள 32 இடங்களில் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இதில், 2 கைத்துப்பாக்கிகள் உள்பட அதிநவீன ஆயுதங்கள் ரூ.4.6 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post டெல்லி உள்பட 6 மாநிலங்களில் என்ஐஏ அதிரடி சோதனை appeared first on Dinakaran.