
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ.60 லட்சம் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து, கடந்த ஜன.25ல் கடலுக்கு சென்ற சச்சின் என்பவரின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மேலும் படகிலிருந்த ஜெயபால், ஏனோக், வீரபாண்டி, சுரேஷ், அந்தோணி, சூசை உள்ளிட்ட 15 மீனவர்களை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை அடுத்து, அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 14 மீனவர்களுக்கு இலங்கை மதிப்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 6 மாத சிறைத்தண்டனை, விசைப்படகு ஓட்டுநர் ஜெயபாலுக்கு இலங்கை மதிப்பில் ரூ.2 கோடி அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார். 15 மீனவர்களுக்கும் விதிக்கப்பட்ட மொத்த அபராத தொகையின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.60.48 லட்சம் ஆகும்.
The post ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ரூ60 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
