×

முன்னாள் ஒன்றிய அமைச்சர் காங்.கில் இருந்து விலகல்

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் அரவிந்த் நேதம். பழங்குடியினத்தை சேர்ந்த இவர் இந்திரா காந்தி, நரசிம்மராவ் ஆகியோர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்துள்ளார்.பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக சர்வ ஆதிவாசி சமாஜ் என்ற அமைப்பை தொடங்கி உள்ள நேதம் கடந்த ஆண்டு நடந்த பானுபிரதாப்பூர் சட்டபேரவை இடைதேர்தலில் தனது அமைப்பின் சார்பில் வேட்பாளரை நிறுத்தினார். இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக நேதம் அறிவித்துள்ளார்.

The post முன்னாள் ஒன்றிய அமைச்சர் காங்.கில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Tags : Former ,Union ,Minister ,Congress ,Raipur ,Former Union Minister ,Arvind Netham ,Chhattisgarh ,Indira Gandhi ,Narasimha Rao ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது