×

எல்லை பிரச்சனை: அசாம்-மேகாலயா முதல்வர்கள் பேச்சுவார்த்தை

கவுகாத்தி: எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண அசாம்-மேகாலயா முதல்வர்கள் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.வடகிழக்கு அண்டை மாநிலங்களான அசாம், மேகாலயா இடையேயான எல்லை பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. பிரிக்கப்பட்ட பிறகு, 1972ம் ஆண்டு அசாம் மாநிலம் இதையடுத்து, அசாம் மறுசீரமைப்பு சட்டம் 1971ல் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அசாமில் இருந்து மேகாலயா 1972ம் ஆண்டு பிரிக்கப்பட்டது.
அப்போது முதல், எல்லையை ஒட்டிய 12 பகுதிகளில் அதாவது 884.9 கி.மீ. தூரப் பகுதி சர்ச்சையாகி வருகிறது.

இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா மற்றும் மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா ஆகியோர் நேற்று கவுகாத்தியில் சந்தித்து எல்லை பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அவர்கள், “சர்ச்சைகுரிய, அசாமின் கார்பி அங்லாங், பிரச்சனைக்குரிய மேகாலயாவின் மேற்கு ஜைன்தியா பகுதிகளுக்கு இருவரும் இணைந்து செல்ல இருக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் பரஸ்பர நம்பிக்கையுடன் சர்ச்சைக்குரிய 6 பகுதிகள் குறித்து கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.

The post எல்லை பிரச்சனை: அசாம்-மேகாலயா முதல்வர்கள் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Assam-Meghalaya ,chief ministers ,Guwahati ,North-eastern ,Assam ,Meghalaya ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...