பல்லடம், டிச.27: பல்லடம் அருகேயுள்ள பொங்கலுார் அகிலாண்டபுரம் ஆதிதிராவிடர் காலனி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இத்தொட்டி சிதிலமடைந்து உள்ளது. காரை பெயர்ந்து கம்பிகள் நீட்டிக் கொண்டிருக்கிறது.
மழை மற்றும் காற்று என இயற்கை சீற்றங்களின்போது எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயம் உள்ளது. அதை அப்புறப்படுத்தி விட்டு வேறு மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
