×

பஸ் ஓட்டுநர் பயண நேர கட்டுப்பாடுகளை தளர்த்த ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

 

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பிள்ளையார்பட்டி அருகே அரசு பேருந்துகள் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரழந்துள்ளது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ஏழை, எளிய மக்கள் அதிகமாக அரசு போக்குவரத்து பேருந்துகளையை நாடுகிறார்கள். வருங்காலங்களில் அவர்களின் பாதுகாப்பான பயணத்திற்கு அரசு வழிவகுக்க வேண்டும். வாகனங்களை இயக்குபவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சமீபமாக பேருந்து விபத்துக்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பயண நேரக் கட்டுபாடுகளை அரசு போக்குவரத்து நிறுவனங்கள் தளர்த்த வேண்டும். இதனால் அதிகமான விபத்துகள் ஏற்பட காணமாக அமைகிறது. ஓட்டுநர்கள் வாகனத்தை கவனத்துடன் இயக்க உரிய வழிகாட்டுதல்களை, கோட்பாடுகளை அரசு வழங்க வேண்டும். அரசு பேருந்து விபத்தில் உயிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு அறிவித்த நிவராணம் தொகை போதுமானதாக இல்லை, அவற்றை 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : G.K. Vasan ,Chennai ,TAMAGA ,president ,Pillayarpatti ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு