நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குநர் கைது

மதுரை: நியோமேக்ஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி தமிழகம் முழுவதும் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்நிறுவனத்தின் துணை நிறுவனம் மில்லியோனா டெவலப்பர்ஸ். இதன் இயக்குனர் தேனி மாவட்டத்தை சேர்ந்த அப்பர் ராஜா. இவரை நேற்று மாலை மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். கடந்த 2010ம் ஆண்டு தொடங்கிய இந்நிறுவனம் 30 முதலீட்டாளர்களிடம் ரூ.10 கோடி வரை வசூலித்திருப்பதாக புகார் உள்ளது. இதன்பேரில் இவரை போலீசார் கைது செய்தனர்.

The post நியோமேக்ஸ் துணை நிறுவன இயக்குநர் கைது appeared first on Dinakaran.

Related Stories: