அந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அதில் வழக்கு பதிவு செய்ய மறுத்தனர். அதனை தொடர்ந்து புகார் அடிப்படையில் எஸ்சி/எஸ்டி ஆணையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையில் ஆஜரான பட்டாபிராம் காவல் ஆய்வாளர் ஜெகநாதனை ஆணையம் கண்டித்தது. சீமான் மீது வழக்குப் பதிவு செய்து செப்டம்பர் 2ம் தேதி ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் சீமான் மீது பட்டாபிராம் காவல் நிலையத்தில் நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது.
The post நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.
