சென்னை: ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். சிகிச்சையில் இருந்த அமைச்சர் செந்தில்பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி நவ. 15ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.