இதனால் படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த மனு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன்பு விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணா,பெப்சி சார்பில் வழக்கறிஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகினர். இரு சங்கங்கள் இடையேயான பிரச்னையை பேசி தீர்ப்பதற்கு ஏன் மத்தியஸ்தரை நியமிக்கக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, யாரை மத்தியஸ்தராக நியமிக்கலாம் என்று இரு தரப்பும் கலந்தாலோசித்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார்.
The post தயாரிப்பாளர்கள்-பெப்சி பிரச்னைக்கு ஏன் மத்தியஸ்தஸ்தரை நியமிக்கக்கூடாது: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.
