இந்த நிலையில்,கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதற்காக முதல்வர் பிரேன் சிங் விரைவில் ராஜினாமா செய்வார் என்று 3 நாட்களுக்கு முன் செய்தி வெளியானது. இந்த நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக வந்த செய்தியை முதல்வர் பிரேன் சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகவும் இக்கட்டான காலக்கட்டத்தில் மணிப்பூர் உள்ளது.
இது போன்ற முக்கியமான நேரங்களில் மணிப்பூர் தலைவர்கள் பலவீனமாக இருக்க முடியாது. எங்கள் திறனில் நாங்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளோம். நான் ராஜினாமா செய்ய போவதாக வந்த தகவல் அனைத்தும் புரளி. இது எங்களுடைய அரசியல் எதிரிகளின் வேலையாகும். மணிப்பூரின் நிலைமை குறித்து பிரதமர் அலுவலகத்தை அரசு தினமும் தொடர்பு கொண்டு வருகிறது. எனவே,ராஜினாமா போன்ற பொய் செய்திகளை ஊடகங்கள் பரப்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
The post மணிப்பூர் முதல்வர் ராஜினாமாவா? ஊடக செய்திக்கு 3 நாட்களுக்கு பின் பிரேன் சிங் மறுப்பு appeared first on Dinakaran.