இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.தனபால், ‘‘மனுதாரர் புகாரை மாஜிஸ்திரேட் முறையாக விசாரிக்கவில்லை. சாட்சிகளின் வாக்குமூலத்தில் முரண்பாடு உள்ளதாக மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். சாட்சிகளின் உண்மைத் தன்மை குறித்து மாஜிஸ்திரேட் ஆராய வேண்டிய அவசியம் இல்லை. ஒரு குற்றச்சாட்டு கூறப்படும்போது அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளதா, இல்லையா என பரிசீலிப்பது மட்டும் தான் மாஜிஸ்திரேட்டின் பணி. மனுதாரர் விவகாரத்தில் மாஜிஸ்திரேட் எதையும் முழுமையாக விசாரிக்க தவறிவிட்டார். எனவே மனுதாரர் மீதான வழக்கு மீண்டும் ராஜபாளையம் மாஜிஸ்திரேட்டிடம் அனுப்பப்படுகிறது. முறையாக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
The post சாட்சிகளின் உண்மைத்தன்மை குறித்து மாஜிஸ்திரேட் ஆராய வேண்டிய அவசியமில்லை: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.