இதையடுத்து உடனடியாக அதிகாரிகள் மண்ணை கொட்டி தீயை அணைத்தனர். அதோடு அங்கே இருந்த ஊழியர்கள் உடனே தீயை அணைத்ததால் ரயில் எரிந்து நாசமாகாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்து காரணமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. பலருக்கு இந்த சம்பவத்தால் மூச்சு திணறல் ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களின் பெட்டிகளில் கசிவு ஏற்படுவதைத் தடுக்க ஒருங்கிணைந்த பெட்டித் தொழிற்சாலை (ICF) வடிவமைப்பு வந்தே பாரத் ரயிலில் சிறிய மாற்றங்களைச் செய்ய முடிவு செய்துள்ளது. சமீபத்தில் மும்பை-அகமதாபாத் வந்தே பாரத் ரயிலில் சில நாட்களுக்கு முன்பு திடீரென மேற்பகுதியில் கசிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
The post மத்திய பிரதேசத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சின் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு: அதிகாரிகள் தீவிர விசாரணை appeared first on Dinakaran.