இந்த சம்பவம் தொடர்பாக ஒருதலைக் காதலன் ஷாரூக் உசேன் மற்றும் அவரது நண்பர் நயீம் அன்சாரி மீது போலீசார் கொலை, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு ஜார்கண்ட் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ரமேஷ் சந்திரா முன் விசாரணகை்கு வந்தது. 51 சாட்சிகள் மற்றும் ஆவணங்களை பரிசீலித்த நீதிமன்றம், 17 வயது சிறுமியை தீ வைத்து கொன்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷாருக் உசேன், நயீம் அன்சாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகளுக்கு தலா 25,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
The post ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள்: ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.