இதனால் அவதிக்குள்ளான பயணிகள், விமான பணியாளர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்னை காரணமாக பயணிகள் மீண்டும் விமான நிலையத்துக்கே திருப்பி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது ஏரோபிரிட்ஜில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதன் பிறகு விமானம் வெள்ளிக்கிழமை அதிகாலை 6 மணிக்கு புறப்படும் என விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார். பின்னர் விமானம் புறப்படும் நேரம் 3 மணிக்கு புறப்படும் என தெரிவித்தது. அமெரிக்காவுக்கு செல்லவிருந்த விமானம் புறப்படும் நேரம் பல முறை மாற்றப்பட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் கடந்த 24ம் தேதி மும்பையில் இருந்து சான் பிரான்சிஸ்கோ செல்ல வேண்டிய விமானம் அடுத்த நாள் காலையில் புறப்பட்டு சென்றது.
The post சான்பிரான்சிஸ்கோவுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானம் நீண்ட நேர தாமதம் ஏசி செயல்படாததால் பயணிகள் மயக்கம் appeared first on Dinakaran.