வழக்கமாக கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நேற்று காலை கோயம்பேடு சந்தைக்கு 33 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் பாதிப்பு இல்லாததால் வரும் நாட்களில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்போது தக்காளி விலை மேலும் சரிந்து பழைய நிலைக்கு வரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைந்து இருந்தாலும் வெளிஇடங்களில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி விலை குறையவில்லை. கிலோ ரூ.100 வரை விற்கப்படுகிறது.
The post கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் ரூ.10 குறைந்தது: கிலோ ரூ.80க்கு விற்பனை appeared first on Dinakaran.