கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்

சென்னை: சென்னை கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்குவது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்க மெட்ரோ நிறுவனம் டெண்டர் கோரியது. 16.07 கிலோமீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரி உள்ளது. கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், முகப்பேர் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் இயக்க விரிவான திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் மெட்ரோ ரயில் பணிகளை 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

The post கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர் appeared first on Dinakaran.

Related Stories: