உடனடியாக அச்சிறுமியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சோதித்து பார்த்த டாக்டர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட லட்சுமணன், குச்சியை எடுத்து குத்தி கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. உடனடியாக டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர். இதில் மலக்குடல் கிழிந்திருந்ததும் தெரியவந்தது. 20 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சிறுமி உயிர்பிழைத்தாள்.
இதற்கிடையில் கூலித்தொழிலாளி லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தில் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, குற்றவாளியான லட்சுமணனுக்கு 2 பிரிவுகளின் கீழ் தனித்தனியாக 2 ஆயுள் தண்டனையும் (28 ஆண்டு), இன்னொரு பிரிவில் 5 ஆண்டு சிறை தண்டனையும் ₹5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். தண்டனையை தனித்தனியாக 33 ஆண்டுகள் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
The post சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை கொடூரனுக்கு 33 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.
