இந்த நிலையில், காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஒரு பெரிய ஊடுருவல் முயற்சியை பிஎஸ்எஃப் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை முறியடித்துள்ளது. நேற்று இரவு சுமார் 12 தீவிரவாதிகள் சம்பா மாவட்ட சர்வதேச எல்லை மூலம் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். இதனை கண்டறிந்த எல்லைப் பாதுகாப்பு படை, சுமார் 7 தீவிரவாதிகளை கொன்றது. எஞ்சிய தீவிரவாதிகள் தப்பிச் ஓடினர். சுட்டுக் கொல்லப்பட்ட அனைவரும் ஜெய்ஸ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே காஷ்மீர் மாநிலம் ஊரியில் உள்ள மொஹுரா அருகே பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் கார் மீது குண்டு பாய்ந்ததில் நர்கீஸ் பேகம் என்பவர் பலியானார். மேலும், காயமடைந்த ஹஃபீசா என்ற மற்றொரு பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
The post காஷ்மீரின் சர்வதேச எல்லை வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 7 ஜெய்ஸ் – இ – முகமது தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றது பாதுகாப்புப் படை!! appeared first on Dinakaran.
