ஜனவரி 1 முதல் நெல்லை, முத்துநகர், பொதிகை உள்ளிட்ட 7 ரயில்களின் நேரம் மாற்றம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!!

சென்னை : ஜன. 1ம் தேதி முதல் விரைவு ரயில்களின் நேர அட்டவணை மாற்றி அமைக்கப்பட உள்ளது. தண்டவாளங்கள் மேம்படுத்தப்பட்டு, மின் மயமாக்கல் பணிகள் முடிவடைந்த நிலையில் புதிய அட்டவணை வெளியானது. புதிய அட்டவணையின்படி வருகின்ற 2026 ஜனவரி 1-ம் தேதி முதல், சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் மறு மார்க்கத்தில் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் நேர மாற்றம்:

1. சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் காலை 7:45 மணிக்கு பதிலாக காலை 8:00 மணிக்கு புறப்படும்.

2. சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் காலை 10:20 மணிக்கு பதிலாக, காலை 10:40 மணிக்கு புறப்படும்.

3. எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் வைகை எக்ஸ்பிரஸ், மதியம் 1:45 மணிக்கு பதிலாக 30 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது 1:15 மணிக்கு புறப்படும்.

4. எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதியம் 2:45 மணிக்கு பதிலாக 3:05 மணிக்கு புறப்படும்.

5. எழும்பூரில் இருந்து தூத்துக்குடி வரை செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7:30 மணிக்கு பதிலாக, இனி 15 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7:15 மணிக்கு புறப்படும்.

6. எழும்பூரில் இருந்து இரவு 8:10 மணிக்கு செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ், இனி 35 நிமிடங்கள் முன்கூட்டியே அதாவது, 7:35 மணிக்கு புறப்படும்.

7. எழும்பூரில் இருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், இனி 8:35 மணிக்கு புறப்படும்.

8. எழும்பூரில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்பட்டு செல்லும் நெல்லை எக்ஸ்பிரஸ், இனி 8:50 மணிக்கு புறப்படும்.

எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் மற்றும் கேரளாவின் கொல்லம் வரை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேரம் மாற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: