இதனிடையே கேரள மாநிலம் வயநாட்டிலும் கடந்த 3 நாட்களாக கனமழை கோடி வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தின் கபினி அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு 6000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 16,977கன அடியாக அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் கபினி அணையின் நீர்மட்டம் 3 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கேஆர்எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்து வருகிறது.
The post கர்நாடகா, கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: கேஆர்எஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.