மும்பை (21 போட்டி, 47 புள்ளி), மோகன் பகான் (20 போட்டி, 42 புள்ளி), கோவா (21/42), ஒடிஷா(21/39), கேரளா(21/20) அணிகள் ஏற்கனவே நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. ஒவ்வொரு அணியும் தலா 22 ஆட்டங்கள் விளையாட வேண்டிய நிலையில் எஞ்சிய ஆட்டங்கள் அணிகளின் தரவரிசையை உறுதி செய்யும். லீக் சுற்று ஏப்.15ல் முடிகிறது. முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். 3-6வது இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றில் விளையாடி எஞ்சிய 2 அரையிறுதி இடங்களை பிடிக்கும்.
இந்நிலையில் நாக் அவுட் சுற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 3-6, 4-5 மோதும் நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் ஏப்.19, 20 தேதிகளில் நடக்கும். முதல் கட்ட அரையிறுதி ஆட்டங்கள் ஏப்.23,24, 2வது கட்டம் ஏப்.28,29 தேதிகளிலும். இறுதிப் போட்டி மே 4ம் தேதியும் நடைபெறும்.
The post மே 4ல் ஐஎஸ்எல் பைனல்: நாக் அவுட் சுற்றில் சென்னை appeared first on Dinakaran.