இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 150 யானை வழித்தடங்கள் உள்ளதாக அண்மையில் உலக யானைகள் தினத்தில் வௌியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிழக்கு மத்திய பகுதியில் அதிக எண்ணிக்கையில் 52 யானை வழித்தடங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக வடகிழக்கு பகுதியில் 48ம், தெற்கு பகுதியில் 32 யானை வழித்தடங்களும் உள்ளன. வடக்கு பகுதியில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் 18 யானை வழித்தடங்களே உள்ளன.
இந்த நான்கு பகுதிகளிலும் மொத்தம் 150 யானை வழித்தடங்கள் உள்ளன. அவற்றில் 126 மாநிலங்களின் அரசியல் எல்லைகளுக்குள்ளும், 19 இரண்டு மாநிலங்களிலும் அமைந்துள்ளன. மேற்குவங்க மாநிலத்தில் அதிகபட்சமாக 26 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் யானைகள் மாநிலங்களை விட்டு வௌியேறி வேறு மாநிலங்களுக்குள் நுழைவதும் அதிகரித்துள்ளது” என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள் appeared first on Dinakaran.