அகல் விளக்கு ஏற்றிய போது தீப்பிடித்து சிறுமி பலி

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த புதூர், காமராஜர் தெருவை சேர்ந்தவர் பசுபதி மகள் பிரியதர்ஷினி (11), கடந்த 1ம் தேதி கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீட்டில் அகல் விளக்குஏற்றியபோது, பட்டு பாவடையில் தீப்பிடித்தது. காற்றில் தீ உடல் முழுவதும் பரவியது. இதனால், சிறுமி அலறி துடித்தாள். இதை பார்த்த பெற்றோர், உடனடியாக சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தாள்.

Related Stories: