இந்நிலையில், அதிமுக பிரமுகர் அண்ணா துரைக்கும், ஒன்றிய அமைச்சர்கள் சிலருக்கும் நட்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் பணத்துடன் முகாமிட்டுள்ள ஆறு பேர் அடங்கிய குழுவினர், தாராபுரம் நகரில் ஏராளமான ஏக்கர் காடுகள், தோட்டங்கள் உள்ளிட்டவற்றை விலை கொடுத்து வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வந்த புகாரின்பேரிலும் அண்ணாதுரை வீடு மற்றும் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், பணம், ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. வழக்கறிஞர் அண்ணாதுரை கூறுகையில்,‘‘சில ஆவணங்களில் மட்டும் என்னிடம் கையெழுத்து பெற்று சென்றுள்ளனர். எனது உதவியாளர் சாதிக் பாட்ஷாவின், பழநி குமரலிங்கம் கிராமத்தில் உள்ள வீடு, பொள்ளாச்சியில் உள்ள எனது மகன் அருண் வீட்டிலும் சோதனை நடந்தது’’ என்றார்.
The post தாராபுரத்தில் அதிமுக பிரமுகர் வீட்டில் ஐடி ரெய்டு appeared first on Dinakaran.