அதில் அவர்கள், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் எஸ்ஐ சிவசக்தி மற்றும் ஏட்டு செந்தில்குமார் எனத்தெரியவந்தது. அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த ரகளையை ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து வெளியிட அது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளில் வைரலானது. இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட எஸ்ஐ சிவசக்தி, ஏட்டு செந்தில்குமார் ஆகியோர் ஆயுதப்படைக்கு இடமாற்றப்பட்டனர். கூடுதல் எஸ்பி செல்லப்பாண்டியன் விசாரணை நடத்தி அறிக்கையை நேற்று, மாவட்ட எஸ்பி சிவக்குமாரிடம் வழங்கினார். அவர் சரக டிஐஜி ராஜேஸ்வரிக்கு அனுப்பினார். இதையடுத்து எஸ்ஐ சிவசக்தியை சஸ்பெண்ட் செய்து டிஐஜி ராஜேஸ்வரியும், ஏட்டு செந்தில்குமாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி சிவக்குமாரும் உத்தரவிட்டனர்.
The post ஓட்டலில் குடிபோதையில் ரகளை எஸ்.ஐ., ஏட்டு சஸ்பெண்ட்: வீடியோ வைரலானதால் நடவடிக்கை appeared first on Dinakaran.