இதுகுறித்து சிம்லாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு கூறியதாவது, “மக்களவை தேர்தலின்போதும் என் மனைவி கமலேஷ் தாக்கூர் போட்டியிட வேண்டும் என கட்சி மேலிடம் என்னிடம் கூறியது. ஆனால் என் மனைவி தேர்தலில் போட்டியிடுவதை நான் விரும்பவில்லை. கட்சி நடத்திய கணக்கெடுப்பு, உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களின் கருத்துகளை கேட்ட பிறகு என் மனைவியை நிறுத்த கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது. இந்த முறையும் மேலிடத்தின் முடிவை என்னால் மறுக்க முடியவில்லை. என் மனைவி டெஹ்ரா தொகுதியை சேர்ந்தவர். வலுவான வேட்பாளர் தேவை என்பதால் அவர் போட்டியிட சம்மதித்தேன்” என்றார்.
The post இமாச்சல் முதல்வர் மனைவி இடைத்தேர்தலில் போட்டி appeared first on Dinakaran.