மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக, நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள், ரூ.40 கூடுதலாக கட்டணம் செலுத்தும்பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும், சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள், 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் மார்ச் 1ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
The post அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40 கூடுதலாக செலுத்தி 4 மணி நேரம் சென்னைக்குள் பயணம் செய்யும் திட்டம்: அமைச்சர் சிவசங்கர் அறிமுகம் appeared first on Dinakaran.