அதன்படி, தங்கம் விலை கடந்த சில மாதங்களாக திடீரென அதிரடியாக உயர்வதும், குறைவதுமாக இருந்து வந்தது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.53,760-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,720க்கு விற்பனையானது. இன்றைய (மே 28) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.6,740-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,210-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.57,680-ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலை 3.50 காசுகள் உயர்ந்து கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.101,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post ஏறுமுகத்தில் தங்கம் விலை; சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.53,920க்கு விற்பனை.! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.