அதன் பின் மூன்றாண்டுகள் ஓடிவிட்டது. இன்னமும் கட்டுமான பணிகள் எதுவும் நடக்கவில்லை. 9 ஆண்டுக்கு முன் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்த திட்டத்தின் கதி இது. மதுரையில் எம்ய்ஸ் கட்டுமான பணிகளை ஒன்றிய அரசு உடனடியாக துவங்க வலியுறுத்தி தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் தங்கள் சார்பில் செங்கல் ஒன்றை மதுரை எம்ய்ஸ் கட்டுமான பணிக்கான தங்கள் பங்களிப்பாக வழங்கலாம். ஒரு காலத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் செங்கற்களை திரட்டினர். அது போல இந்த எம்ய்ஸுக்கு செங்கல் அனுப்புவதை மக்கள் இயக்கமாக நடத்தினால் தான் மதுரையில் எம்ய்ஸ் வரும் போல என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
The post மதுரை எய்ம்சுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை: குடும்பத்துக்கு ஒரு செங்கல் அனுப்பினால் தான் திட்டம் நிறைவேறுமோ? appeared first on Dinakaran.