முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் நீதிமன்றம்

கரூர்: முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போலி ஆவணங்கள் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நில அபகரிப்பு விவகாரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் மிரட்டியதாக மேலக்கரூர் சார்-பதிவாளர் புகார் அளித்தார். மேலக்கரூர் சார்-பதிவாளர் முகமது காதர் அளித்த புகாரில் ரகு, சித்தார்த், செல்வராஜ் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் நீதிமன்றம் appeared first on Dinakaran.

Related Stories: