இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் செயற்குழுவில் இந்தியர் நியமனம்

லண்டன்: இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில், தொழிலாளர் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரஜ் பாட்டீல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் கல்புர்கியில் பிறந்த நீரஜ் பாட்டீல் ஒர்த்திங் மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். லாம்பெத் நகர மேயராக ஒரு முறை அவர் பதவி வகித்துள்ளார். தற்போது தொழிலாளர் கட்சியின் உத்திகளை வகுப்பது மற்றும் முக்கிய கொள்கைகளை வகுக்கும் 39 உறுப்பினர்களை கொண்ட தேசிய செயற்குழுவில் அவர் இடம் பெற்றுள்ளார்.

 

The post இங்கிலாந்து தொழிலாளர் கட்சியின் செயற்குழுவில் இந்தியர் நியமனம் appeared first on Dinakaran.

Related Stories: