யானை மிதித்து பெண் சாவு

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மாமரம், வெள்ளரிக்கொம்பை பழங்குடியின கிராமம் அருகே குடியிருப்பு பகுதியில் நேற்று 3 காட்டு யானைகள் நின்றிருந்தன. இதை கவனிக்காமல் அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மனைவி ஜானகி (60), வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றார். அப்போது புதர் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை, தும்பிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்து, ஜானகியை கொன்றது.

The post யானை மிதித்து பெண் சாவு appeared first on Dinakaran.

Related Stories: