முப்பெரும் விழா உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றி சரிதம் படைப்போம்: முதல்வர் எக்ஸ் தள பதிவு

சென்னை: வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிட, முப்பெரும் விழாவின் உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து முதல்வருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: வள்ளுவ முனை முதல் தலைநகர் சென்னை வரை இனமான உணர்வால் ஓருயிராய் வாழும் உடன்பிறப்புகளின் சங்கமமானது அண்ணாசாலை ஒய்.எம்.சி.ஏ. திடல்.

அமெரிக்கப் பயணத்துக்குப் பின் தொண்டர்களின் முகங்களை ஒருசேரக் கண்டு உற்சாகம் பெற்றேன். நமது உயிர்நாடிக் கொள்கைகளில் ஒன்றான மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுக்கவும் – வரலாறு காணாத வெற்றியை 2026 தேர்தலில் பெற்றிடவும் இந்த முப்பெரும் விழாவின் உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றிச் சரிதம் படைப்போம். தத்தமது ஊர்களுக்குத் திரும்பிடும் திமுகவினர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டு வீடு சேரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

The post முப்பெரும் விழா உணர்வெழுச்சியை உரமாக்கி வெற்றி சரிதம் படைப்போம்: முதல்வர் எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.

Related Stories: