வெள்ளம் மட்டுமின்றி நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாண்டி அருகே சண்டிகர்-மணாலி தேசிய நெடுஞ்சாலையில் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலை வழியாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சிம்லாவில் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பலர் குறுகிய சாலைகள் கொண்ட பகுதிகளில் உள்ள நிலையில் அந்த இடங்களுக்கு சிறிய லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. குலுமணாலி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்களை அங்கிருந்து திரும்ப முடியாமல் சிக்கி இருக்க கூடும் தெரிகிறது. விடுதிகள், ஓட்டல்களில் தங்கி இருக்கும் சுற்றுலா பயணிகளின் விவரங்களை அளிக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
The post இமாச்சல் பிரதேசத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் குடிநீருக்கு தட்டுப்பாடு: பொதுமக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.